தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும் !



தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே.

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் அருளிய இந்தப் பாசுரம் மனித இயல்பிலுள்ள பலவீனங்களை நோயாகப் பட்டியலிட்டு திருவேங்கடவா, உன்னைக் காணும் ஆசையினால் வந்தேன், நாயேனையும் ஆட்கொண்டருளுவாய் என்று இறைவனைப் பற்றிக்கொள்ளும் பாங்குடன் மிக அழகாகச் சொல்கிறது.

சத்ப்ரேம் என்கிற அடியவருடன் ஸ்ரீ அரவிந்த அன்னை நிகழ்த்திய உரையாடல்களில் 1961 ஆம் வருடம் பெப்ரவரி ஏழாம் தேதியிட்ட பதிவில் இந்த விஷயத்தை ஸ்ரீ அரவிந்த அன்னை விளக்கமாகக் குறிப்பிடுகிறார். என்ன செய்ய வேண்டும் என்று ஸ்ரீ அன்னையிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதியிருந்த அடியவர் ஒருவருக்கு மறுமொழியாகச் சொன்னதைப் படிக்கச் சொல்வதிலிருந்து இந்த உரையாடல் தொடங்குகிறது.

"என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறாய்.

அதை விட எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; எனென்றால் வாழ்க்கையில் சூழ்நிலைகளும், செயல்களும் அவ்வளவு முக்கியமானது அல்ல. அவற்றை நாம் எந்த மனப் பாங்கோடு நாம் எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம்.

இதிலிருந்து தான் தொடங்குகிறது.....

மனித சுபாவத்தில், உடலைப் பெரிதாகக் கருதும் போது, நோவு சாத்திக் கொள்ளும். இதயத்தில், உணர்வுகளைக் கூர்ந்து நோக்கும் போது மகிழ்ச்சியற்ற தன்மை தோற்றும்.மனதைக் கவனிக்கும் போது குழப்பம் தான் மிஞ்சும்.

இதிலிருந்து மீள்வதற்கு இரண்டு வழிகள் தானுள்ளன.

ஒன்று மிகக் கடுமையானது. தொடர்ச்சியாகக் கடுந்தவம் செய்வது, இது மிக வலிமை உள்ள, ஏற்கெனெவே இந்தப் பாதைக்கென்று விதிக்கப்பட்ட வெகு சிலரால் தான் முடியும்..

இன்னொன்று, தன்னைப் பற்றியே சிந்திப்பதிலிருந்து விடுபடுவதற்கு அல்லது மாற்றாக வேறொன்றைத் தேடிக் கொள்வது. இந்த வகையில் ஏராளமானவை இருந்தாலும், அதிகம் பேர் தேர்ந்தெடுப்பது திருமணம் தான்; எனென்றால் அது தான் மிக எளிதாகக் கிடைக்கிற மாற்று. யாரோ ஒருவரை நேசிப்பது, பிள்ளை, குட்டிகளை நேசிப்பது,என்பது உன்னை மும்முரமாக இருக்கச் செய்வதற்கும், உன்னை மறந்து போவதற்கும் ஒரு சாதனமாக இருக்கிறது. ஆனால் இந்த வழி மிக அரிதாகவே வெற்றியடைகிறது ஏனென்றால் அன்பு என்பது மிகச் சாதாரணமாகக் காணக் கிடைப்பதில்லை.”

இந்த உரையாடலை முழுவதும் படிக்க

இந்த அன்பு, நேசம், காதல் என்றெல்லாம் சொல்லப் படுவது தான் என்ன?

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"At first, one loves, when one is loved.

Next, one loves spontaneously, but one wants to be loved in return!

Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!”


1966 ஏப்ரல் 15 ஆம் தேதியன்று ஸ்ரீ அன்னை அருளியது.

இந்த அன்பு என்பது என்ன, எங்கிருந்து தொடங்குகிறது?

“Not for the sake of the husband does the husband become dear, O Maitreyi; the husband becomes dear for the sake of the Self. It is not because of the wife that she is held dear; it is for the sake of the Self. The son is held dear, not for the sake of the son, but for the sake of the Self. Wealth is dear, cattle are dear, not because of the cattle or wealth, but because of the Self. Spiritual power, military power, are held dear not for their own sakes, but for the sake of the Self. The other worlds are held dear not for their sakes but for the sake of the Self. The gods too are held dear not because they are gods, but because of the Self. The Vedas are dear, all created things are dear, not because of themselves, but because of the Self. Whatever else there be that is held to be dear is so because of the Self. It is this Self that has to be seen, heard about, thought of, meditated upon. The Self being seen, heard of, thought about, meditated upon, all else will be known, O Maitreyi”.

இதைப் பற்றி ஸ்ரீ நளினி காந்த குப்தா ஒரு உபநிஷத் கதையைச் சொல்லி விளக்கி இருப்பதை விரிவாக இங்கே படிக்கலாம்

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!