மண்டேன்னா ஒண்ணு! இலவசங்கள் என்ற மாயை!


இந்தப்படத்தைப் போட்டு ஒரு கிரேக்கப் பழங்கதையை தி கார்டியன் நாளிதழ் நினவு படுத்துகிறதாம்! கடவுள்களால் சபிக்கப்பட்ட ஒரு அரசன் .ஒரு பெரும்பாறையைத் தோளில் சுமந்துகொண்டு  செங்குத்தான மலைமேல் ஏறவேண்டும்.அப்படி ஏறுகிற சமயம் உச்சியை நெருங்குகிற ஒவ்வொரு சமயமும் பாறை நழுவிக் கீழே விழ இந்த அரசனும் மறுபடி அந்தப்பாறையைக்  கீழே இருந்து தூக்கிச்சுமந்து மேலேறவேண்டும். இந்தக் கதை மாதிரியே கிரீஸ் நாட்டின் கடன்சுமையும் தீராத தொடகதையாக இருக்கிறது என்று கதை சொல்கிறது.  

இப்படி ஆனதற்கு யார், எது காரணம்  என்று ஆராயப்போனால் இன்னொரு கிரேக்க இதிகாசமாகிவிடக் கூடும் சுருக்கமாக கிரீஸ், மிகப்புராதானமான பேரரசாக இருந்தது எப்படிக் கீழே சரிந்து பத்தோடு பதினொன்றாக ஆகிப்போனது என்று பார்த்தால் முறையான கட்டுப்பாடு, மதிப்பீடுகள் இல்லாத பொருளாதாரம், வரவுக்கு மீறிய செலவு, ஜனங்களிடம் சேமிப்புப் பழக்கம் இல்லாதது என்று ஏகப்பட்ட சீக்குகளுடன் இருந்தது. விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே 

இலவசங்கள் என்ற மாயைஎப்படி எப்படிப்பல்வேறு நாடுகள், பொருளாதாரங்களை ஆட்டிப் படைத்து, அழித்திருக்கிறது என்பதை இங்கே பல்வேறு சமயங்களில் உள்ளூர் நடப்பைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். பொதுவுடைமை பேசிய சோவியத் யூனியன் சிதறிப்போனது, சோஷலிசக்கனவுகளில் சிதறுண்டு போன பல சிறு தேசங்கள், கடைசியாக சீனாவில்  கம்யூனிஸ்ட்கட்சி  தான் ஆட்சி செய்கிறது என்றாலும் கம்யூனிசத்துக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாது போன கதை  எல்லாம் சொல்கிற  பாடம் ஒன்றே  ஒன்று தான்!இலவசங்கள் என்பதே மாயை என்பது மட்டும் தான்! கிரீஸ் நாட்டில் நடந்து கொண்டிருப்பது ஒரு புதிய பாடம், படிப்பினையாக வளரக்கூடும். கிரீஸில் தொடரும் சிக்கல்



 இலவசங்கள், ஊதாரித்தனமான அரசுச்செலவினங்களால் திவாலாகிப் போகிற அளவுக்கு வந்தபிறகு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த எடுத்த சிக்கன நடவடிக்கைகளில் வெறுத்துப்போன கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு இடதுசாரி அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ந்துபோனவர் ஒரே ஒரு பதிவர் தான். அவருடைய பதிவில் எப்படி இந்த சாதனை நிகழ்ந்தது என்பதற்கான அடிப்படை விவரங்கள் இல்லை.பதிவின் முடிவில் ஒரு பதினைந்து நிமிட வீடியோ ஒன்றை  பார்த்ததிலும் கூட ஊதாரிகளாகச்  சீரழிந்தபொருளாதாரத்தை எப்படிச் சரி செய்யப்போகிறார்கள் கடன்சுமையை எப்படிக் குறைக்கப்போகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்கவில்லை.ஆனால் வெற்று வாக்குறுதிகள் நிறைய!


சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்: 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாட்டுக்குக் கடன்கொடுத்த மற்ற நாடுகளுடன் ஒரு மோதல் போக்கையே புதிதாகத்தேர்ந்தேடுக்கப் பட்டிருக்கும் சிறிசா இடதுசாரிகள் கடைப்பிடிக்கப் போவது தெளிவாகி இருக்கும் நிலையில் ஜெர்மனி அரசு கிரேக்க நாட்டுக்குப்  புதுசலுகைகள் எதையும் தரப் போவதில்லை என்பதில் மிகுந்த கண்டிப்புடன்  அறிவித்திருக்கிறது.


When asked in a newspaper interview published yesterday whether there could be further concessions for Greece, Merkel said Athens had already been forgiven billions of euros by private creditors. “I don’t see a further debt haircut,” she said.



Her comments echoed those made the previous day by the German finance minister, Wolfgang Schäuble, who told Die Welt: “If I were a responsible Greek politician, I wouldn’t lead any debates over a debt haircut.”

கிரீஸ் அரசியல்வாதிகள் ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி அமெரிக்க அதிபர் ஒபாமா கிரீசுக்குத்தேவை வளர்ச்சிதானே ஒழிய சிக்கன நடவடிக்கைகள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்.தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைப் புதிய அரசு  கிடப்பில் போட்டிருக்கிறது.


ஏற்கெனெவே சீனப்பொருளாதாரம் மந்தமடைந்து வரும் செய்தியோடு சேர்த்துப் பார்த்தால்,கிரேக்கப் பொருளாதாரச்சுமையும் கடனும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தையும், குறிப்பாக ஜெர்மனியையும் பாதிப்பதாக  இருக்கலாம். கிரீஸ் மாதிரியே ஸ்பானிஷ் பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் இருக்கிறது. அங்கும் ிக்கன நடவடிக்கைகள் வேண்டாம் எனக் கண்டனக்குரல்கள் கலகக்குரல்களாக மாறி ஒலி த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பேசிவிட்டு, இந்தியாவுக்கு இதில் என்ன சம்பந்தம் என்றும் சேர்த்துப் பார்க்காவிட்டால் இந்தப்பதிவு எதற்காக? 

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற தருணங்களில் இந்தியா கிட்டத்தட்ட திவாலான நிலைமையில் தான் இருந்தது.அர்த்தமில்லாத சோஷலிசம் பேசிப் பேசியே பற்றாக்குறை பட்ஜெட், ஊதாரித்தனமான செலவுகளைக் கட்டுப்படுத்தாமல்,பொதுத்துறை என்றால் பொறுப்பில்லாத துறை இப்படிப் பொருளாதாரம் விவஸ்தை கெட்ட நிலையில்இருந்த தருணங்கள் அவை. கசப்பு முந்துதான், ஆனால் கொடுத்துத்தானாக வேண்டும் என்ற நிலையில் நரசிம்மராவ் துணிந்து பொருளாதரச் சீர்திருத்தங்களைக் கையிலெடுத்தார் முதலில் வந்தது வங்கித்துறை சீர்திருத்தம் அதற்கு முன்னோட்டமாக இருந்தது 1991 இல் ஏற்பட்ட  ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான வித்தியாசத்தைக் கொடுக்க முடியாமல் கையிருப்பில்லாமல் போன அவலம் தான் 
A Balance of Payments crisis in 1991 pushed the country to near bankruptcy. In return for an IMF bailout, gold was transferred to London as collateral, the rupee devalued and economic reforms were forced upon India. That low point was the catalyst required to transform the economy through badly needed reforms to unshackle the economy. Controls started to be dismantled, tariffs, duties and taxes progressively lowered, state monopolies broken, the economy was opened to trade and investment, private sector enterprise and competition were encouraged and globalisation was slowly embraced. The reforms process continues today and is accepted by all political parties, but the speed is often held hostage by coalition politics and vested interests.
— India Report, Astaire Research
நரசிம்மராவுக்கு இதில் உறுதுணையாக எந்த மன்மோஹன்சிங் இருந்தாரோ அவரே பின்னாட்களில் பிரதமராக ஆகி வெறும் டம்மிப்பீசாக மட்டுமே இருந்த பத்தாண்டுகளில் தானும்சேர்ந்து  பாடு பட்டுக் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் பலனை முறிக்கிற மாதிரி சீரழிக்கிற மாதிரிஅமைச்சரவை சகாக்கள்செயல்பாடுகள், மற்றும் ஓட்டுவங்கி அரசியலுக்காக இலவசங்களை வாரியிறைத்துப் பாழ்படுத்திய வரலாற்றுச்சோகம் நகைமுரண் வேறெதுவும் இருக்க முடியாது. 

கிரேக்கப் பொருளாதாரச்சிக்கல்  கடன்சுமை கலகக்குரல்கள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால்  நாம் கற்றுக்கொண்டு மறந்துபோன விஷயத்தை மறுபடியும் நினைவு படுத்துகிற மாதிரி இருப்பது புரிகிறதா?

இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்! There is  no free lunch!

******


1 comment:

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!